திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு ஒன்று கடித்தத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,
”திமுக ஆட்சியில் அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப் பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர்போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம். மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்து விடுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?போன்ற அச்சங்களுக்கு நடுவே மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது.
இதற்கு இடையே ரிஷிவந்தியம் அருகேயுள்ள கீழ்த்தேனூர் அரசுப் பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வரும் செய்தி மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக் கல்வித் துறை இருக்கிறதா? அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
கல்வியில் சிறந்த தமிழாடு என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்து கொள்வது வெட்கக்கேடானது. விஷப்பூச்சி, பாம்பு கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கான உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
