தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் அறிவிப்பது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில்,மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 41 வழித்தடங்கள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதில் ஜவாலகிரி – அஞ்செட்டி, பில்லிக்கல் – ஜாவலகிரி உள்ளிட்ட மூன்று வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 வழித்தடங்களை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில வழித்தடங்கள் கைவிடப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறுதி செய்யப்பட்ட மூன்று யானைகள் வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதேபோல தடாகம் பள்ளத்தாக்கில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமை கருவேல மரங்களை அகற்ற, ஆரம்பகட்ட நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என, தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மாவட்டங்களில் உள்ள பசுமை நிதியை பயன்படுத்தி கொள்வது தொடர்பாக சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version