ஆண்டு இறுதித் தேர்வுகள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும், அனைத்து மாநிலத்திலும் நடந்து கொண்டிருப்பதால், அது முடிந்த உடன் லாக்டவுன் அமுல் படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவிட்-19ல் அமுல்படுத்தப்பட்ட லாக் டவுன் போன்று இல்லாமல், எரிவாயு பொருள்களின் பதற்றத்தையும், தட்டுப்பாட்டையும், கட்டுப்படுத்தக்கூடிய புதுவகை லாக்டவுன் என சொல்லப்படுகிறது.! வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் உள்ளது நமது இந்தியாவிற்கு, அச் சூழலை கருத்தில் கொண்டு எரிபொருள்களை மிச்சப்படுத்தவும், எரிபொருள்களின் தட்டுப்பாடுகளை தேசிய அளவில் வராமல் பாதுகாக்கவும், இந்த லாக்டவுன் அமல்படுத்து படுகிறது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகத்தில் உள்ள முதன்மை அதிகாரிகள் அனைத்து மாநிலத்திலும் உள்ள தலைமை செயலாளர்களிடமும், முதல்வர்களிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் வணிக நிறுவனங்கள் இயங்கும். அதாவது திங்கள், புதன், வெள்ளி, மீதி நாட்களில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியூர் செல்ல அனுமதி இல்லை, அத்திவாசிய தேவைக்கு மட்டும் வாகனங்களை உபயோகப்படுத்தலாம், அதுவும் இ- பாஸ் விண்ணப்பம் பெற்று முறையான அறிவுறுத்தலுடன் செல்லலாம், மற்றபடி ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனை, மருந்து கடை, பால் கடை, காய்கறி கடைகள், இயங்க அனுமதி இருக்கும்.
அனேகமாக இந்த லாக்டவுன் முறை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் அமல்படுத்த மிகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தான் நேற்று பாரதப் பிரதமர் சூசகமாக அறிவித்துள்ளார்.!
