Close Menu
    What's Hot

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்துக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் – மு.க.ஸ்டாலின்
    Featured

    எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்துக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் – மு.க.ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025Updated:September 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5531mkstalin1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை 10 கோடியாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் , வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையோடு செயல்பட்டு வருவதாக கூறினார்.மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படுவதாக கூறிய முதலமைச்சர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 13000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 67.97 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராம புறங்களில் 3.38 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை 10 கோடியாக உயர்த்த வலியுறுத்தியுள்ளதாக கூறிய அவர், இந்த நிதியை உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் கூறினார். சிறு விவசாயிகளுக்கு 55 விழுக்காடு மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 45 விழுக்காடு மானியமும் வழங்கப்படும் நிலையில், விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட திமுக அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து மானியம் வழங்கி வருவதாகவும், விவசாயிகளுக்கான 16 சதவீதம் ஜிஎஸ்டி வரியையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என்றார்.

    இதுவரை 3397 குழந்தைகள் நல மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுவதாகவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்து மாவு வழங்கப்பட்டு ஊட்டச்சத்து கண்காணிக்கப்படுகிறது என்றும், 5552 மையங்களை தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

    14.6% ஆக இருந்த குழந்தைகளின் மெலிவுத்தன்மை 3.6% ஆக குறைந்துள்ளதாக கூறிய அவர், குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் பெறும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மத்திய அரசு தன்னுடைய நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என இந்த குழு மூலம் வலியுறுத்தப்படும் என்றார்.

    இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், துரை வைகோ, மாணிக்கம் தாகூர், டி.ஆர்.பாலு, அமைச்சர்கள். ஐ.பெரியசாமி, பன்னீர்செல்வம், கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாகை, திருவாரூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரம்…
    Next Article ரூ.36 கோடி வருமானவரி பாக்கி நோட்டீஸ். ஜெ.தீபா நீதிமன்றத்தில் கதறல்
    Editor TN Talks

    Related Posts

    50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் பாஜக!. கிடுக்கிபிடிபோடும் அதிமுக!. வெளியான தகவல்!

    December 26, 2025

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    December 26, 2025

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    சவுக்கு சங்கருக்கு ஜாமீன்!. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!.

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    December 26, 2025

    அடிடா விசில!. விஜய் கட்சியின் சின்னம் இதுதான்!. வெளியான புது தகவல்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.