டென்னிஸில் உயரியப் போட்டியான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான யானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார். முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார் ஸ்வெரேவ். தொடக்க செட்டை இழந்த சின்னர், அதன்பிறகு தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் 6-7, 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வரேவை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார் சின்னர். இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் டென்னிஸில் தனது ஆதிக்கத்தை சின்னர் மேலும் வலுப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், முதல் விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் கனவுடன் களமிறங்கிய ஸ்வெரேவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version