Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கரூர் விவகாரம்!. பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!.
    இந்தியா

    கரூர் விவகாரம்!. பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!.

    Editor web3By Editor web3January 21, 2026Updated:January 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Karur Stampede 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு பிப்ரவரி 3ம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இக்கட்சி 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனையொட்டி விஜய் தமிழ் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். தேசிய அளவில் அதிவலைகளை ஏற்படுத்து இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகளின் விசாரணையானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஜனவரி 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக அறிவுறுத்தி விஜய்க்கு சம்மன் அனுப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். சுமார் 7 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது. தொடர்ந்து விஜய் சிபிஐ விசாரணைக்காக 2-வது முறையாக கடந்த 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

    இந்தநிலையில், இந்த வழக்கை தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. ஆனால் கரூர் வழக்கை ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என தவெக தரப்பிலும், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல தனி நபர்கள், பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப உறுப்பினர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் வழக்கை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வழக்கு விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கரூர் சென்ற சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

    அதன் பின் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரிடமும், தவெக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தியதோடு தவெக தலைவர் விஜய்யை இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி சுமார் 13 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலவரம், விபரங்கள் குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 3ம் தேதி கரூர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவுடன் ஆலோசனை நடத்தி சி.பி.ஐ தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவுடன் பங்காளி சண்டை மட்டுமே!. கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்!
    Next Article எடுபடாத செங்கோட்டையன் பேச்சு!. வைத்தியலிங்கத்தை அலேக்கா தூக்கிய செந்தில் பாலாஜி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.