மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா அவர்கள் தனது இறுதிக்காலத்தில் வசித்து வந்த மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள ‘தி கேபின்ஸ்’ (The Cabins) என்ற பிரம்மாண்ட பங்களாவை டாடா சன்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. கடல் பார்த்தவாறு அமைந்துள்ள இந்த 13,200 சதுர அடி பரப்பளவு கொண்ட பங்களாவில், ஒரு அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்டது.

இந்த பங்களாவை 5 ஆண்டு காலத்திற்குத் குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரியில் கையெழுத்தானது. இதற்காக டாடா சன்ஸ் நிறுவனம் மாதம் ரூ.17.56 லட்சம் வாடகையாக வழங்கவுள்ளது. மேலும், வட்டி இல்லாத முன்பணமாக ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகைத் தொகை 10% உயர்த்தப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்தானது டாடா சன்ஸ் நிறுவனத்தின் முழு சொந்தமான துணை நிறுவனமான ‘ஈவார்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ (Ewart Investments) நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். தரைத்தளம், அடித்தளம் மற்றும் மூன்று மாடிகளைக் கொண்ட இந்த பங்களாவில் ஏர் கண்டிஷனர்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நவீன மரச்சாமான்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. டாட்டா குழுமத்தின் மிக உயரிய தலைவர்கள் தங்குவதற்காகவே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் மீண்டும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version