Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»குஜராத் விமான விபத்து – 241 பயணிகள் பலி.. பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டும் அபாயம்…
    இந்தியா

    குஜராத் விமான விபத்து – 241 பயணிகள் பலி.. பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டும் அபாயம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 12, 2025Updated:June 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    513087 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழந்தனர். பயிற்சி மருத்துவர்கள் 60 பேர் வரை உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனின் காட்விக் விமானநிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.37 மணிக்கு புறப்பட்டது. 825 அடி உயரம் பறக்கும் வரை விமானம், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கும் மேலேபோக விமானி முயற்சித்துள்ளார். ஆனால் அது பலனளிக்காததால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்துள்ளார். அதற்குள்ளாக விமானம் 400 அடி உயரம் அளவுக்கு தடாலடியாக கீழிறிங்கியது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் தந்தபோது அங்கிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

    அதாவது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாக மேகானி என்ற குடியிருப்பு பகுதியில் அங்கிருந்த பி.ஜே.என்ற மருத்துவக்கல்லூரி உணவு விடுதி கட்டிடத்தின் மீது விமானம் பலத்த சத்தத்துடன் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை, பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அவர் உத்தரவிட்டார்.

    90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் காந்திநகரில் இருந்து விமான விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தன. மொத்தம் மூன்று குழுக்கள் வதோதராவில் இருந்து அகமதாபாத்திற்கு சென்றன.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உயிர் பிழைத்து வெளியே வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் பி.ஜே.மருத்துவமனையில் அந்த நேரத்தில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டிடம் முழுவதும் உருக்குலைந்ததால் உள்ளே 60-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கக் கூடும் என தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவை உலுக்கிய முக்கிய வான் விபத்துகள்… அகமதாபாத் விபத்திலும் ஒற்றுமை உள்ளதா?
    Next Article 234 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    December 26, 2025

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.