Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பெங்களூர் கூட்ட நெரிசல் – காங்கிரஸ் பதவி விலக வேண்டும்.. பாஜக வலியுறுத்தல்
    இந்தியா

    பெங்களூர் கூட்ட நெரிசல் – காங்கிரஸ் பதவி விலக வேண்டும்.. பாஜக வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 04 18 13 29
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக நடத்தப்பட்ட வெற்றிப்பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும் கர்நாடக பாஜக வலியுறுத்தி உள்ளது.

    நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 18 ஆண்டுகால சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஏக்கத்தை ஆர்சிபி தீர்த்துக் கொண்டது. இதனை நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிர்கள் நேற்றிரவு முதல் கொண்டாடி வந்தனர்.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த கர்நாடக அரசும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் திட்டமிட்டன. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பெங்களூர் விதான் சௌதா கட்டிடத்தில் இருந்து சின்னசாமி ஸ்டேடியம் வரை வீரர்களை பேருந்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு வருவதும் என்றும் முடிவானது.

    ஆர்சிபி வீரர்களை பார்க்க காலை முதலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குவிய ஆரம்பித்தனர். குறிப்பாக கேட் 6,7,12 ஆகிய நுழைவு வாயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களை பெரும் போராட்டத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா அளித்துள்ள பேட்டியில், இது அரசாங்கத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். ஒருபுறம் மக்கள் உயிரிழந்துள்ளனர், மறுபுறம் வெட்கமின்றி கொண்டாட்டங்களை தொடர்கிறார்கள். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் பேசாதது ஏன்? அடிப்படை ற்பாடுகள் மற்றும் போலீஸ் படை அங்கு இல்லை. இதற்கு யார் பொறுப்பு? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    13 dead RCB parade Bengaluru stampede BJP reaction BJP Congress Karnataka BJP demands resignation Karnataka government crisis political fallout Bengaluru accident RCB parade tragedy politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது மட்டுமே முதலமைச்சரின் கவனம்..
    Next Article 2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு.. பாஜகவின் சதி என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..
    Editor TN Talks

    Related Posts

    யார் இந்த AjayRastogi ?

    October 13, 2025

    கரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை

    October 10, 2025

    அந்தரங்க வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை – மத்திய அரசு

    October 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.