Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பிரதமர் ஒப்புக்கொண்டாரா?. ரஷ்ய எண்ணெய் குறித்த டிரம்பின் கூற்று நிராகரிப்பு!
    இந்தியா

    பிரதமர் ஒப்புக்கொண்டாரா?. ரஷ்ய எண்ணெய் குறித்த டிரம்பின் கூற்று நிராகரிப்பு!

    Editor web3By Editor web3February 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Randhir Jaiswal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கமாட்டோம் என பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளியான தகவல்களை இந்தியா நிராகரித்துள்ளது.

    வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, 140 கோடி இந்தியர்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு முக்கிய முன்னுரிமை என்பதை அரசு பலமுறை பொது வெளியில் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், சந்தை நிலவரங்களும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளும் கருத்தில் கொண்டு இந்தியா தனது எரிசக்தி கொள்முதல்களை பல்வேறு நாடுகளிலிருந்து மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

    வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், எங்கள் தேவைகளுக்கு ஏற்ப உலகின் எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் தேசிய நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும். இதுவரை எடுக்கப்பட்டதும், இனி எடுக்கப்படவுள்ள அனைத்து முடிவுகளும் இதே அடிப்படையிலேயே இருக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று ரஷ்யாவும் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் வர்த்தகம் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்,” என்று கூறினார்.

    மேலும், வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் வெனிசுலா நீண்டகால கூட்டாளியாக இருந்து வருகிறது என்று கூறியது. ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “நாங்கள் 2019-20 ஆம் ஆண்டு வரை வெனிசுலாவிடமிருந்து எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தோம், அதன் பிறகு அதை நிறுத்த வேண்டியிருந்தது. பின்னர் 2023-24 ஆம் ஆண்டில் வெனிசுலாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கத் தொடங்கினோம், ஆனால் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்ட பிறகு அதை நிறுத்த வேண்டியிருந்தது.” என்றார்.

    ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 16 இந்தியர்கள் குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, “ஈரானில் உள்ள அந்த 16 மாலுமிகளை சந்திக்க எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. பந்தர் அப்பாஸ் நகரில் எங்கள் அதிகாரிகள் அவர்களை சந்தித்தனர். ஈரான் அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, அந்த 16 பேரில் 8 பேர் விடுவிக்கப்பட்டு தாய்நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். மீதமுள்ள 8 பேர் தொடர்பாகவும் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் என்பதை நாம் பரிசீலித்து வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளது. ”

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீங்கள் இல்லாமல் வருங்காலம் இல்லை..! பரிந்துரைகளை வழங்குங்கள்..! தவெகவின் வெளியிட்டுள்ள புதிய இணையதளம்…!
    Next Article மாணவர்களுக்கு குஷி!. கோடை விடுமுறை!. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.