மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் இப்போது இந்தியர்களின் படுக்கையறை வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காண்டம்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சந்தையில் சில முன்னணி பிராண்டுகள் தட்டுப்பாடாக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் காண்டம் தயாரிப்பிற்குத் தேவையான கச்சாப் பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. போர் காரணமாக இந்த விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை ரப்பர் பாலை (Latex) திரவ நிலையில் வைத்திருக்க அம்மோனியா அவசியம். இந்தியா தனது அம்மோனியா தேவையில் 86 சதவீதத்தை சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளதால், கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
காண்டம்களில் லூப்ரிகண்டாகப் பயன்படுத்தப்படும் இந்த எண்ணெய் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலையும் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. கந்தகம் (Sulphur) மற்றும் துத்தநாக ஆக்சைடு (Zinc Oxide) போன்ற பொருட்களின் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.அலுமினியம் மற்றும் பி.வி.சி (PVC) படலங்களின் விலை உயர்வால் காண்டம் பொட்டலமிடும் செலவும் அதிகரித்துள்ளது.
விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் காண்டம் பயன்பாட்டைக் குறைக்கும் அபாயம் உள்ளது. இது திட்டமிடப்படாத கருத்தரிப்புகளுக்கு வழிவகுக்கலாம். காண்டம் பயன்பாடு குறைவது எச்.ஐ.வி (HIV) மற்றும் இதர பாலியல் தொற்று நோய்கள் (STI) பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
