Close Menu
    What's Hot

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.
    இந்தியா

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    Editor web3By Editor web3March 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    delhi fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் (Palam) மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (மார்ச் 18) காலை 7 மணியளவில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் துணிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ குடியிருப்புப் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடித் தீயை அணைத்தன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன; இதில் 3 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். தீ விபத்தில் இருந்து தப்பிக்கக் கட்டிடத்தின் மேலிருந்து குதித்தவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள   மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தத் துயரச் சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாலம் பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த நீதித்துறை விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதாக்குதலில் இருந்து தப்பிய ஜக் லாட்கி கப்பல்!. கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது!.
    Next Article EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    March 18, 2026

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கார்கேவின் ‘காதல்’ பஞ்ச்: “தேவகவுடா எங்களை நேசித்தார்; மோடியை மணந்துவிட்டார்!” நாடாளுமன்றத்தில் சிரிப்பலை!.

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    Trending Posts

    திமுக – சிபிஐ ஒப்பந்தம்!. 5 தொகுதிகள் ஒதுக்கீடு! கூடுதல் இடங்களுக்காக மல்லுக்கட்டும் CPM!.

    March 18, 2026

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    March 18, 2026

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?. முக்கிய அறிவிப்பு!

    March 18, 2026

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.