Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு!- மைக்ரோசாப்ட் அறிவிப்பு
    இந்தியா

    இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு!- மைக்ரோசாப்ட் அறிவிப்பு

    Editor web1By Editor web1December 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mod
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.

    இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா, டெல்லியில் இன்று (டிச. 9) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு திறன் ஆகியவற்றை உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    செயற்கை நுண்ணறிவு துறையைப் பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சத்ய நாதெல்லா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாக அமைந்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் செய்ய உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில்  மிகப்பெரிய தகவல் மையம் அமைப்பதற்காக 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல் டி20: 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
    Next Article SK 26: வெங்கட் பிரபுவின் இன்ஸ்டா பதிவு வைரல்!
    Editor web1
    • Website

    Related Posts

    புயலால் பாதித்த இலங்கைக்கு இந்தியா ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி!

    December 23, 2025

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.