நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, நிர்மலா சீதாராமன், முக்கிய நகரங்களுக்கு இடையே ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை இந்தியா உருவாக்கும் என்று கூறினார். இந்த வழித்தடங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணிகள் போக்குவரத்து அமைப்புகளை ஊக்குவிக்கும் ‘வளர்ச்சி இணைப்புகளாக’ (growth connectors) செயல்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த அதிவேக வழித்தடங்கள் மும்பை–புனே, ஹைதராபாத்–புனே, ஹைதராபாத்–பெங்களூரு, ஹைதராபாத்–சென்னை, சென்னை–பெங்களூரு, டெல்லி–வாரணாசி,
மற்றும் வாரணாசி–சிலிகுரி ஆகிய நகரங்களை இணைக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், கிழக்கில் உள்ள டாங்குனி (Dankuni) நகரத்தையும் மேற்கில் உள்ள சூரத் (Surat) நகரத்தையும் இணைக்கும் புதிய, தனிப்பட்ட கிழக்கு–மேற்கு சரக்கு வழித்தடம் (east–west freight corridor) அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும், பல்வகை போக்குவரத்து முறைகளை ஊக்குவிக்கவும் தளவாடச் செலவுகளைக் குறைக்கவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22 புதிய தேசிய நீர்வழித்தடங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் மூத்த பாஜக தலைவர் முன்மொழிந்தார். “இந்த முயற்சிகள் சரக்கு போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தி, நிலையான சரக்கு போக்குவரத்திற்கு ஆதரவளிக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
