சமூக ஊடங்களை பலர் தவறாக பயன்படுத்துவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப்பில் கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பத்திரிக்கையாளருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கேரள பத்ரிக்கையாளருக்கு கண்டனம் தெரிவித்தனர். அத்தோடு, யூடியூப் வீடியோக்கள் நீதிமன்ற செயல்முறைக்கு மாற்றாக இருக்க முடியாது. தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. யூடியூப் வீடியோ மூலம் கருத்தை திணிக்க முடியாது. யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் பேசப்படும் எதிர்மறையான விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
ஊழல் எதிர்ப்பு பெயரில் யாருடைய புகழையும் பாதிக்கும் வகையில் செயல்பட முடியாது. விமர்சிப்பது சட்டத்தின் கண்ணோட்டத்தில் தவறானது. ஊழலை எதிர்ப்பதாக கூறி அவதூறு கருத்து பரப்ப சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.