காஷ்மீரில் ’ஆபரேஷன் அகல்’ நடவடிக்கையின் கீழ் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் விடிய விடிய நடைபெற்றது.

பாதுகாப்பு படையின் மீது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்த, இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ’ஆபரேஷன் அகல்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version