Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை.. 3 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை..!! இந்தியாவில் அமலாகிறது புதிய சட்டம்..!!
    இந்தியா

    வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை.. 3 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை..!! இந்தியாவில் அமலாகிறது புதிய சட்டம்..!!

    Editor web3By Editor web3December 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Job
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாகவுள்ளதா என்ற எதிர்பார்ப்பு, பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள இந்த முறையை நம் நாட்டிலும் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான அம்சம் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் உள்ளதாகவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

    தற்போது, நம் நாட்டில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலையையும், மற்ற தொழிற்சாலைகளில் 6 நாட்கள் வேலை நடைமுறையையும் பின்பற்றுகின்றன. ஆனால், ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல வெளிநாடுகள், ஊழியர்களின் ‘வொர்க் லைஃப் பேலன்ஸ்’ஸை உறுதி செய்வதற்காக வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை வழங்கும் முறையை பின்பற்றி வருகின்றன. ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறை, அந்நாடுகளில் நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

    புதிய சட்டத்தின் முக்கிய அம்சம் என்ன..?

    இந்த நடைமுறை இந்தியாவிலும் சாத்தியமா என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த நவம்பர் 21ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள் (New Labour Code) மூலம் இது சாத்தியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஊதிய சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு சட்டம் 2020 ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை மாற்றி இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவதற்கான அம்சம் இடம்பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

    4 நாட்களுக்கு 12 மணி நேர வேலை :

    இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “புதிய தொழிலாளர் சட்டங்கள், வாரத்தில் 4 நாட்களுக்கு 12 மணிநேர வேலை செய்ய அனுமதிக்கின்றன. மீதமுள்ள 3 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

    இந்தியாவில் வாராந்திர வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி. ஒரு நாளைக்கு 8 மணிநேரம் பணி செய்தால், வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால், புதிய சட்டத்தின்படி, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணி செய்தால், 4 நாட்களில் 48 மணிநேர வேலையை ஊழியர்களால் முடிக்க முடியும். இந்த 12 மணிநேர வேலை நாளில் இடைவேளையும் அடங்கும்.

    மேலும், கூடுதல் நேரம் (ஓவர் டைம்) வேலை செய்தால், அதற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவும் இந்த சட்டம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், வரும் நாட்களில் நம் நாட்டிலும் வாரம் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களுக்கு எத்தனை நாட்கள் அரையாண்டு விடுமுறை? அறிவிப்பு வெளியானது
    Next Article புதிய மைல்கல்!. 600 பில்லியன் டாலர்களை தாண்டிய எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    December 23, 2025

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.