ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்க்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து சர்வதேச சட்டங்களை மீறி ஈரானின் உயரிய தலைவரைப் படுகொலை செய்துள்ளதாக அரக்ச்சி தனது கடிதத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு “பயங்கரவாதச் செயல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராகப் சர்வதேச சமூகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க ஈரானுக்கு முழு உரிமை உண்டு என்றும், இந்தத் தாக்குதலுக்குப் பொருத்தமான நேரத்தில் மற்றும் சரியான முறையில் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மையை உருவாக்கி, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
