கத்தார் அரச குடும்பம் சார்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, சொகுசு விமானம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. ஏர் போர்ஸ் ஒன் என்ற இந்திய புதுப்பிக்கப்பட்ட போயிங் 747-8 விமானத்தின் தொடக்க நிகழ்ச்சி மேரிலேண்டில் உள்ள கூட்டு ராணுவ தளத்தில் நடந்தது.
அதில் கலந்து கொண்டு விமான சேவையை தொடங்கி வைத்து டிரம்ப் பேசினார். அவர் பேசும் போது, விமானத்தின் வடிவம் மற்றும் திறன்கள் ஆகியவற்றை புகழ்ந்து பேசினார். 10 மாதங்கள் என்ற மிக குறுகிய காலத்தில், யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில், அது உருமாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதுவரை யாரும் பார்க்காத வகையில் சொகுசு வசதிகளை கொண்டு, பறக்கும் ஒரு வெள்ளை மாளிகை போன்று காட்சியளிக்கிறது என்றார். ஆனால், இது ஒரு வகையில் லஞ்சம் என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு துறை கூறும்போது, இந்த பரிசு விவகாரத்தில், லஞ்சத்திற்கு நிகரான விதிமீறல்கள் எதுவும் கிடையாது என்றும் அரசியலமைப்பு அதனை தடை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இது டிரம்ப்புக்கான பரிசு அல்ல. அமெரிக்காவின் விமான படைக்காக கொடுக்கப்பட்டது. இதன்பின்னர், அதிபர் நூலக அறக்கட்டளைக்கு இந்த விமானம் கொண்டு செல்லப்பட உள்ளது என தெரிவித்தது. இந்த விமானம், பறக்கும் அரண்மனை என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அதில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
விமானத்தில் ஆடம்பர வசதி கொண்ட படுக்கையறை, ஓய்வறை, கூட்டம் நடைபெறும் அறை, பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட குளியலறைகள் மற்றும் ஒரு பெரிய படிக்கட்டு ஆகியவை உள்ளன. டிரம்புக்காக விமானத்தில் தேவையான சில மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. இந்த விமானத்தின் மதிப்பு ரூ.3,413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த காலத்தில் இதுபற்றி டிரம்ப்பிடம் நிருபர்கள், பதிலுக்கு கத்தார் ஏதேனும் கேட்டார்களா? என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், இந்த கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும்.
கத்தாரின் ஒரு பெரிய செயல் என்றே நான் நினைக்கிறேன். இதனை வெகுவாக பாராட்டுகிறேன் என்றார். இதுபோன்ற சலுகையை வேண்டாம் என கூறும் நபராக நான் ஒருபோதும் நினைக்கிறேன். இதனை வெகுவாக பாராட்டுகிறேன் என்றார். இருக்கமாட்டேன். இந்த இலவச மற்றும் மிக விலையுயர்ந்த விமானத்தின் மீது எங்களுக்கு விருப்பமில்லை என கூறினால் நான் ஒரு முட்டாளாக இருக்க கூடும். ஆனால், அவர்களின் ஓர் உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடு என்றே இதனை நான் நினைத்தேன் என கூறினார்.
