Close Menu
    What's Hot

    அடிடா விசில!. விஜய் கட்சியின் சின்னம் இதுதான்!. வெளியான புது தகவல்!

    2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»மர்மம் விலகுமா?. 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்!
    உலகம்

    மர்மம் விலகுமா?. 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    missing malaysia flight
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2014ல் 227 பயணிகள், 12 பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு சென்றபோது MH370 விமானத்தை தேடும் பணி டிசம்பர் 30 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2014ம் ஆண்டு, 227 பயணிகள், 12 பணியாளர்கள் என 239 பேருடன் சென்ற மலேசியாவின் MH370 விமானம் திடீரென மாயமானது. புறப்பட்ட சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டு மையங்களுடன் கொண்ட அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டது. மிகத் தீவிரமான தேடுதலுக்கு பிறகும் அந்த விமானம் என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்கள், விமானப் பொறியாளர்கள், தேடியும் எந்த பயனும் இல்லை. இதனையடுத்து 2017ம் ஆண்டு விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

    ஆப்ரிக்க கடற்கரை மற்றம் இந்திய பெருங்கடல் பகுதிகளில் மாயமான விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், கறுப்புப்பெட்டிகள் உள்ளிட்ட விமானத்தின் பெரும்பகுதி பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. பல ஆயிரம் சதுர கிலோமீட்டரில் 200 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா அரசுகளின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

    இதனிடையே, அந்த விமானத்தை தேடும் பணியை டிச.30 முதல் மீண்டும் தொடங்க மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. “No Find, No Fee” என்ற ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின் Ocean Infinity நிறுவனம், 55 நாட்கள் இடைவிடாத தேடுதல் பணியை மேற்கொள்ள உள்ளதாக மலேசிய அரசு கூறியுள்ளது. விமான பாகங்களை அந்நிறுவனம் கண்டறிந்தால், $70 மில்லியன் கொடுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 தொடர்: இந்திய அணி இன்று தேர்வு
    Next Article 5230 கோடி ரூபாய் பொருட்செலவில் கட்டடம் கட்ட ஜெர்மாட் மக்கள் எதிர்ப்பு
    Editor TN Talks

    Related Posts

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    December 26, 2025

    வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்புகிறது சீனா

    December 26, 2025

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடிடா விசில!. விஜய் கட்சியின் சின்னம் இதுதான்!. வெளியான புது தகவல்!

    2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    Trending Posts

    அடிடா விசில!. விஜய் கட்சியின் சின்னம் இதுதான்!. வெளியான புது தகவல்!

    December 26, 2025

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    December 26, 2025

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.