Close Menu
    What's Hot

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வெள்ளம், நிலச்சரிவால் இலங்கையில் 47 பேர் உயிரிழப்பு: புரட்டிப் போட்ட கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது
    உலகம்

    வெள்ளம், நிலச்சரிவால் இலங்கையில் 47 பேர் உயிரிழப்பு: புரட்டிப் போட்ட கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025Updated:November 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    lnkkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். காணாமல்போன 21 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இலங்கை தீவின் மேற்பரப்பில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நவ.17-ம் தேதி முதல் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்வதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தொடர் மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. மழை, வெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. நிலச்சரிவு மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ள பதுல்லா மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. அங்கு இரவில் வீடுகள் மீது மண் சரிந்து விழுந்ததில் 16 பேர் உயிருடன் பூமிக்குள் புதைந்தனர். 21-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நிலச்சரிவால் 400 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,100 குடும்பங்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

    6 லட்சம் ஏக்கரில் பயிர்கள் நாசம்: நாட்டில் 6 லட்சம் ஏக்கர் பரப்பிலான நெல் வயல்கள், காய்கறித் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படு கிறது. கண்டி மாவட்டத்தில் 18 செ.மீ. மழை பெய்ததால், அங்கு அவசர கால பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பகுதியின் சில இடங்களில் 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. எனினும், கிழக்கு பகுதியில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவே கனமழை கொட்டி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் கவனம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் எம்.பி.க்களுக்கு அதிபர் அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளிகள் மூடல்: மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

    கனமழை, வெள்ளத்தால் மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பல தேசியப் பூங்காக்களை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ரயில், பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் 2024 ஜூனில் கனமழைக்கு 26 பேர் உயிரிழந்தனர். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவட தமிழகத்தை நவ.30-ல் நெருங்குகிறது ‘டித்வா’ புயல்: 4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’
    Next Article திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!
    Editor TN Talks

    Related Posts

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    December 26, 2025

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஹஜ் பயணம் மேற்கொள்ள ஜன.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.