கடலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு, இயற்கை அழகும், அமைதியும், ஆன்மிகச் சாந்தியும் நிரம்பிய இடம். அங்கு செல்வது சுலபம் தான். ஆனால், அனைவருக்கும் அனுமதி இல்லை. குறிப்பாக, ஆண்களுக்கு அங்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த இடம் ஏன் உருவாக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? உலகில் ஆண்கள் அனுமதிக்கப்படாத ஒரே தீவு இதுதானா? இந்த தனித்துவமான இடத்தின் முழு கதையையும் அறிந்து கொள்வோம்.
இந்த தீவு பால்டிக் கடலில், ஃபின்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சூப்பர் ஷி தீவு (SuperShe Island) என்று அழைக்கப்படுகிறது. சுமார் 8.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தனி தீவு, அடர்ந்த காடுகள் மற்றும் அமைதியான கடல் சூழலால் சூழப்பட்டு, ஒரு தனியான, அமைதியான இடமாக அமைந்துள்ளது.
இது ஏதோ மர்மமான அல்லது தடைசெய்யப்பட்ட அரசாங்கப் பகுதி அல்ல, மாறாக பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு தனியார் சுகாதார ஓய்வு விடுதி.
இந்த தீவுக்கு நிறுவுனர் கிரிஸ்டினா ரொத் (Christina Roth), முன்னாள் டெக் தொழில் நிறுவனத்தின் CEO. பெண்கள் சமூக அழுத்தங்களின்றி தங்களுக்காக கவனம் செலுத்தும் இடத்தை உருவாக்குவது இதன் நோக்கம். இங்கு இயற்கை சூழலில் யோகா, தியானம், ஆரோக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
விடுமுறையில் கூட, தங்களின் தோற்றம், நடத்தைகள், அல்லது சமூக எதிர்பார்ப்புகள் பற்றி பதற்றம் அனுபவிக்கிறார்கள் கிறிஸ்டினா ரோத் நம்பினார். அதனால், பெண்கள் முழுமையான சுகாதாரமும், பாதுகாப்பும் கொண்ட சூழலில் நேரத்தை செலவிடக் கூடிய இடத்தை அவர் உருவாக்கினார். இதன் காரணமாக ஆண்கள் நுழைவதை முற்றிலும் தடை செய்தனர்
இது பெரிய விடுதி அல்ல. ஒரே நேரத்தில் எட்டு பெண்கள் மட்டுமே இங்கு தங்க முடியும். இந்த தீவுக்கு வருபவர்கள் உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்னவென்றால், அவர்கள் தங்களின் நிலை, அடையாளம் அல்லது சமூகப் பதவி பற்றி அல்ல, மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
இதன் காரணம், இது தனியார் சொத்து என்பதால், உரிமையாளருக்கு தன் விதிகளை விதிக்கும் உரிமை உண்டு. ஆண்களைத் தடுக்கும் விதி அரசு சட்டம் அல்ல; இது தனியார் நலச்சந்திப்பு (retreat) கொள்கை மட்டுமே.
உலகின் பல பகுதிகளில் பெண்களுக்கு மட்டுமேயான கிளப்புகள் அல்லது இடங்கள் ஏற்கனவே உள்ளன, மேலும் சூப்பர்ஷி தீவு என்பதும் இதே போன்ற ஒரு கருத்தாகும்.