ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மரணத்திற்குப் பிறகும் பதற்றம் தணியவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்கின்றன, ஈரான் பதிலடித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு முதல் தெஹ்ரான் மீது பெய்த ஏவுகணைகள் மற்றும் குண்டுளை முன்னெப்போதும் இல்லாத வகையில் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. .

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’  தளத்தில், “ஈரான் இன்று மிகப் பெரிய தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறியுள்ளது. ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. மீறிச் செய்தால், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு பயங்கரமான பலத்துடன் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் “சிங்கத்தின் கர்ஜனை” என்று குறியீட்டுப் பெயரிட்டுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா அதன் நடவடிக்கைக்கு “எபிக் ஃப்யூரி”(Epic Fury) என்று பெயரிட்டுள்ளது. இதற்கிடையில், ஈரானிய இராணுவம் பதிலடித் தாக்குதல்களுக்கு “கமாத்-இ-தூஃபான்” என்று பெயரிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான், கும் (Qom), ஹைஃபா, கோர்ரமாபாத் மற்றும் இஸ்பஹான் ஆகிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதற்குப் போட்டியாக ஈரான் தரப்பு குவைத், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.

காமேனியின் மரணத்திற்குப் பிறகு பேசிய ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், “அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களது ‘சிவப்புக் கோட்டை’யைத் தாண்டிவிட்டன. இதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆகவேண்டும். எங்கள் படைகள் அனைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தளங்களைத் தொடர்ந்து தாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version