Close Menu
    What's Hot

    அமெரிக்காவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்தி இஸ்ரோ சாதனை

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»2026ல் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு!- பிரேமலதா விஜயகாந்த்
    அரசியல்

    2026ல் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு!- பிரேமலதா விஜயகாந்த்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmdk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026ல் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    திருப்பூரில் நடந்த தேமுதிகவின் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும் என்றார். கட்சியைப் பலப்படுத்தி, மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். தான் செல்லும் இடமெல்லாம் மகத்தான வரவேற்பு உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என 2026ல் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். திமுக ஆட்சிக்கு 50/50 என மதிப்பெண் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வடமாநில மக்கள் அதிகளவில் திருப்பூரில் உள்ளதாக  தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், இங்குள்ளவர்கள் வாக்கை எடுத்துவிட்டு புதிதாக வந்தவர்களுக்கு வாக்கு வழங்குவது என்பதை தேமுதிக எதிர்ப்பதாக  குறிப்பிட்டார். எங்கு பிறந்தார்களோ அங்கு தான் அவர்களுக்கு வாக்கு இருக்க வேண்டும் என்றார்.

    செங்கோட்டையன், தவெக, அதிமுக உட்கட்சி குறித்த கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என்று பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். ஸ்டாலின், விஜய் இவர்களில்  யார் தளபதி என்ற கேள்விக்கு, நாட்டுக்காக ராணுவத்தில் எல்லையில்  உள்ளவர்கள் தான் உண்மையான இந்தியாவின் தளபதி என்று அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் பதவியை இபிஎஸ்ஸூக்கு விட்டுக் கொடுத்தேன்.. செங்கோட்டையன் பேச்சு
    Next Article BREAKING: தமிழகம், புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    December 25, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமெரிக்காவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்தி இஸ்ரோ சாதனை

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    Trending Posts

    அமெரிக்காவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்தி இஸ்ரோ சாதனை

    December 25, 2025

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    December 25, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.