Close Menu
    What's Hot

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»21-ம் தேதி மதுரையில் த.வெ.க மாநாடு… கட்டுப்பாடுகள் என்னென்ன? விஜய் மட்டுமே பேசுவாராம்…
    அரசியல்

    21-ம் தேதி மதுரையில் த.வெ.க மாநாடு… கட்டுப்பாடுகள் என்னென்ன? விஜய் மட்டுமே பேசுவாராம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 9, 2025Updated:August 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் 21-ம் தேதி நடைபெறவுள்ள த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக போன்ற கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விஜய்யின் தவெக முதன் முதலாக தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், முழு வீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில்,

    வரும் 21-ம் தேதி மதுரையில் தவெக மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக பாரபத்தியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ”200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது.

    மாலை 3.15 மணிக்கு தொடங்கும் மாநாடானது இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்க போலீசார், 42 கேள்விகள் கேட்டு விளக்கம் அளிக்கக் கூறி இருந்த நிலையில், தவெக சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. மாநாட்டில் 1.20லட்சம் ஆண்கள், 25,000 பெண்கள், 4,500 முதியவர்கள், 500 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்வார்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் 1.5லட்சம் நாற்காலிகள், 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள், 400 தற்காலிக கழிப்பறைகள், 50-க்கும் மேற்பட்ட எல்.இ.டி திரைகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் 420 ஒலிப்பெருக்கிகள், 20,000 மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. அதேப் போல, தொண்டர்கள் உள்ளேயும், வெளியேயும் செல்வதற்கு 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி கேட்டு சுகாதாரத்துறையிடம் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. தனியார் டாக்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு மாநாட்டு பணியில் ஈடுபடுத்தப்படும்.
    12 அவசர கால வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    கொடி ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல், தீர்மானம், விஜய் உரை, நன்றியுடன் மாநாடு நிறைவுபெறுகிறது. மாநாட்டில் விஜய் தவிர முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை. விஜய் மட்டுமே பேசுகிறார். மதுரை விமானம் நிலையம் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது” என த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான்… முதலமைச்சர் திட்டவட்டம்…
    Next Article தேசிய தூய்மை விருதுகள் : தமிழ்நாடு பட்டியலில் இல்லை… முதல் பரிசை தட்டிய விசாகப்பட்டினம்…
    Editor TN Talks

    Related Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    December 29, 2025

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    Trending Posts

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 டிசம்பர் 2025

    December 30, 2025

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    December 29, 2025

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    December 29, 2025

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.