Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மத்திய அரசை கண்டித்து ஸ்டாலின் போராட்டம் நடத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை
    அரசியல்

    மத்திய அரசை கண்டித்து ஸ்டாலின் போராட்டம் நடத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sbs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இருந்து காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அணி திரள் போராட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இருந்து காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன.

    ஆர்பாட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”மத்தியில் மோடி ஆட்சி அமைந்தது முதலாக, காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை சிதைத்து வருகிறார். தற்போது காந்தி பெயரில் உள்ள திட்டத்தை பாஜகவினர் மாற்றியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 150 நாட்கள் வரைதான் வேலை உள்ளது. மற்ற நாட்களில் ஊதியம் இல்லாமல் அவர்கள் சிரமம் அடைவதை கருத்தில்காெண்டு, மன்மோகன் சிங் ஆட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தையும் பாஜக அரசு மாற்றியுள்ளது.

    குறிப்பாக, இந்த திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்கியது ஏன்? இதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

    இதையடுத்து பேசிய திராவிட கழக தலைவர் கி வீரமணி, “காந்தியின் பெயரை நீக்குவதை ஏற்க முடியாது. விவசாயிகளுக்கு வேலை உத்தரவாதம் கொடுக்கதான் காந்தியின் பெயரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டத்தின் பெயரை வேண்டுமானால் அவர்கள் மாற்றலாம். காந்தியை நாம் ஒவ்வொருவரும் நினைத்து பார்ப்பதை அவர்களால் மாற்ற முடியுமா? அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக அரசு செயல்படுகிறது. இது பெயர் மாற்றம் மட்டுமல்ல என்பதை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்றார்.

    இதனைத்தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”தமிழ்நாட்டை சீண்டி பார்க்க வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கல்வி உரிமை, தகவல் உரிமை என எத்தனையோ திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதில், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது மிகச் சிறப்பான திட்டம். இந்த திட்டம் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பது மோடிக்கு பிடிக்கவில்லை.

    அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மக்கள் அறிவாளிகள். அதனால்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டை பிடிக்கவில்லை. இந்த திட்டம் இல்லையென்றால், மக்கள் இறந்து போய் இருப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் அணி திரள் போராட்டம் நடத்த வேண்டும். மக்களுக்காக இந்த போரட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனநாயகன் படத்தின் 2வது பாடல் வெளியானது.. நீங்க பார்த்திட்டீங்களா?
    Next Article டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9வது நபர் கைது!
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    December 23, 2025

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    December 23, 2025

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.