Close Menu
    What's Hot

    தந்தை பெரியாரின் 52வது நினைவுநாள்!. முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!.

    கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழின் பெருமையை பிரதமர் பேசுவது தேர்தலுக்காக போடும் வேஷம்: மார்க்சிஸ்ட் காட்டம்
    அரசியல்

    தமிழின் பெருமையை பிரதமர் பேசுவது தேர்தலுக்காக போடும் வேஷம்: மார்க்சிஸ்ட் காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் மொழியின் பெருமைகளை பிரதமர் மோடி பட்டியலிட்டுப் பேசுவது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அவர் போடும் வேஷம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமைகளைப் பற்றியும், ‘தமிழ் கற்கலாம்’ என்பது குறித்தும் புளகாங்கிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியின் பெருமைகளைப் பட்டியலிட்டுப் பேசுவது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதமர் மோடி போடும் வேஷம். எனவே, தேர்தல் வரை இதுபோன்ற பொய்க்குரலை அவரிடம் இருந்து அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும்.

    இதைத்தான் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது’ என்பார்கள் முன்னோர்கள். தமிழகத்துக்கு வெற்றுப் புகழுரைகள் தேவை அல்ல. உரிமைக்கான நிதி ஒதுக்கீடும், மத்திய அரசின் திட்டங்களில் தமிழருக்குரிய இடமும்தான் தேவை. பேச்சில் இருக்கும் தமிழ் மீதான பாசம், அவரது செயலில் இருக்கும் பாரபட்சமான கொள்கைகளால் முறிக்கப்படுகிறது. இது இரட்டை வேட அரசியல்.

    தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர் பணிகளுக்காக சமீபத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வில், தமிழ் பாடத் தேர்வில் 85 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய செய்தி. இதில் யாரை குற்றம் சொல்வது? தாய்மொழி தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தது குறித்து ஆசிரியர்களும், சமூகமும் கவலைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 தேர்தல்: புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகிறாரா ஜெகத்ரட்சகன்?
    Next Article “விஜய் எனது அரசியல் எதிரி அல்ல” – கமல்ஹாசன் கருத்து
    Editor TN Talks

    Related Posts

    கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

    December 24, 2025

    இபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வேண்டவே வேண்டாம்… ஓபிஎஸ் திடீர் பல்டி

    December 24, 2025

    குழப்பத்தில் முடிந்த அதிமுக-பாஜக மீட்டிங்! ஓ.பி.எஸ் வைத்த பெரிய டிவிஸ்ட்..!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தந்தை பெரியாரின் 52வது நினைவுநாள்!. முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!.

    கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    Trending Posts

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.

    December 24, 2025

    இபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வேண்டவே வேண்டாம்… ஓபிஎஸ் திடீர் பல்டி

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.