சேகர்​பாபுவை சந்தித்த பிறகுதான் செங்கோட்​டையன் தவெக-வில் இணைந்​தார். ஆகவே, சேகர்​பாபுவின் ஆலோசனைப்​படிதான் அவர் தவெக-வில் இணைந்​திருக்​கி​றார்” என்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்​திரன் தெரிவித்​தார்.

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெறும் 4-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்​சிக்கு, தென்காசி காசி விஸ்வ​நாதர் கோயில் அருகில் இருந்து 15 வாகனங்​களில் யாத்ரீகர்கள் புறப்​பட்டுச் சென்றனர். இந்த பயணத்தை நயினார் நாகேந்​திரன் கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார். பின்னர் அவர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்த இறந்துபோன 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்​பட்டன. அதுபோல், தமிழகத்தில் மறைந்த சுமார் 75 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருப்​ப​தாகச் சொல்கி​றார்கள். 2002-க்கு பின்னர் யாரெல்லாம் இறந்து போனார்களோ அவர்களது பெயர்கள் எல்லாம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளன.

முதல்​வரின் கொளத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் மட்டும், இறந்துபோன 10 ஆயிரம் பேரின் பெயர்கள் உள்ளன. அவற்றை நீக்கி​விடக்​கூடாது என்பதுதான் திமுக-வின் நோக்கம். முதல்வர் அதற்காகத்தான் நீதிமன்​றத்​துக்கு சென்றார். இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும், 18 வயது நிரம்​பிய​வர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் எஸ்ஐஆர் கொண்டு​வரப்​பட்டது. இதில் குளறுபடி எதுவும் இல்லை. முதல்​வர்தான் குளறுபடி செய்கி​றார்.

செங்கோட்​டையனை தவெகவுக்கு பாஜகதான் அனுப்​பியதாக கூறுவது உண்மையாக இருந்தால் அவர் ஏன் சேகர்​பாபுவை சந்திக்க வேண்டும்? சேகர்​பாபுவை சந்தித்த பிறகுதான் செங்கோட்​டையன் தவெக-வில் இணைந்​தார். ஆகவே, சேகர்​பாபுவின் ஆலோசனைப்படி தான் அவர் தவெக-வில் இணைந்​திருக்​கி​றார்.

அதிமுக ஆட்சியில் செங்கோட்​டையன் போக்கு​வரத்துத் துறை அமைச்​சராக, கல்வி அமைச்சராக இருந்​தபோது நல்லாட்சி இல்லையா? தவெக-வில் சேர்ந்த பின்னர், நல்லாட்சி தருவோம் என்று அவர் சொல்வதை மக்கள் எப்படி பார்ப்​பார்கள்? எந்த தனிப்பட்ட நபரையும் நம்பி எந்தக் கட்சியும் இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் கூட நிறைய மாற்றங்கள் வரலாம். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version