பாமக விதியின் படியும், கட்சி சட்டத்தின் படியும், கட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர்களுக்கு மட்டுமே உள்ளது என பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கியதாக வெளியானத அறிவிப்புக்கு அன்புமணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காததால் அவரை பாமக கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது, அவரின் இந்த அறிவிப்பு பாமக கட்சியை கட்டுப்படுத்தாது.

அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் கிடையாது, அதில் விருப்பமும் கிடையாது, நாட்டமும் கிடையாது. அன்புமணி உளவு பார்த்து இருந்தால் இப்படி ஒரு சூழல் இருந்திருக்காது. பாமகவில் நிலவி வந்த பல்வேறு குழுப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் நல்ல முடிவு கிடைத்துள்ளது.  தேர்தல் ஆணையம் கடிதத்தை உரிய நேரத்தில் வெளியிட உள்ளோம்.

பாமக விதியின்படியும், கட்சி சட்டத்தின் படியும் கட்சி நிர்வாக பணிகளை கட்சி பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கட்சி விதிகளின்படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கவில்லை எனவும், நீக்கம் செய்வது, கூட்டம் நடத்துவது எந்த முடிவுகளாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.  இன்றைக்கு மருத்துவர் அய்யா வெளியிட்ட அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தனர். அவரின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது அன்புமணி தொடர்ந்து தலைவராக வருகிறார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் கட்சி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்தல் நெருங்கி வரக் கூடிய வேளையில் கட்சியின் அமைப்பு தேர்தலை நடந்த கூடிய சூழல் இல்லை எனவும் எனவே கட்சித் தலைவர் செயலாளர் பொருளாளர் 3 பேரின் பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒருமனத்தோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்திற்கும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை தெரிவித்தோம். எங்களது விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆய்வு செய்து பாமகவின் தலைவர் செயலாளர் பொருளாளர் பதவி காலத்தை பொது குழுவின் தீர்மானத்தின் படி 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என கூறினார்.

பாமகவின் தலைவராக அன்புமணி அவர்களும் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்கிறார்கள். மருத்துவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு கட்சி விதிகளின்படி தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவு அடிப்படையில் செல்லத்தக்கது அல்ல என தெரிவித்தார்.

பாமக கட்சியை மருத்துவர் அய்யாவின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது எனவும், ராமதாஸின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞருமான பாலு  தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version