Close Menu
    What's Hot

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கட்சிக்கொடி விவகாரம் – தவெக புதிய மனு
    அரசியல்

    கட்சிக்கொடி விவகாரம் – தவெக புதிய மனு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dinamani2024 10 260wpjnbmdvijai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, த.வெ.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் பதிவுத்துறையில், தங்கள் அமைப்பின் வணிக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆனந்த் பதில்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கொள்கை அடையாளமாகவே அரசியல் கட்சி கொடியை பயன்படுத்துகிறது. இதில் வர்த்தக நடவடிக்கையோ, பொருளாதார பரிவர்த்தனையோ ஏதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், த.வெ.க. எந்த வர்த்தகத்திலும், வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. நடிகர் விஜய், அரசியலில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்ற அற்ப காரணத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

    கட்சியினருடன் விரிவான விவாதங்கள் நடத்தி வடிவமைக்கப்பட்டுள்ள த.வெ.க. கட்சிக் கொடி என்பது வெறும் அடையாளம் அல்ல; தமிழ் வரலாறு, கலாச்சாரம், அரசியலை உள்ளடக்கிய கொள்கை வடிவமைப்பு. புரட்சியை குறிக்க சிவப்பும், நம்பிக்கையை குறிக்க மஞ்சளும் பயன்படுத்தப்பட்டுள்ளது என பதில்மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    நிறங்களை பயன்படுத்துவதற்கு இதுபோன்ற விளக்கங்களை மனுதாரர், வணிக முத்திரை பதிவின் போது அளித்துள்ளாரா என, த.வெ.க. தனது பதில்மனுவில் கேள்வி எழுப்பியுள்ளது.

    த.வெ.க. கொடியில் சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்களை பயன்படுத்த தடை விதித்தால், அது கட்சியின் அரசியல் இருப்பையே பாதிக்கச் செய்யும். வணிகச் முத்திரை என்பது, சங்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அதிக அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க. பதில்மனுவுக்கு விளக்கம் அளிக்க தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
    Next Article 10 நாட்கள் கழித்து தலைமை செயலகம் வரும் முதலமைச்சர்… புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…
    Editor TN Talks

    Related Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    December 29, 2025

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    Trending Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.