Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம்
    விளையாட்டு

    ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    suryaaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் ஐசிசி விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராவுஃப் 4 தகுதியிழப்புப் புள்ளிகளுடன் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சூரியகுமார் யாதவுக்கு 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை முழுதுமே இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கடைசி இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை வென்றது, ஆனாலும் இருதரப்புமே ஆட்ட உணர்வு, ஸ்போர்ட்ஸ்மென்களுக்கு உண்டான நாகரிகத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் உட்ப்ட பலரும் இரு அணிகள் மீதும் அதிருப்தியை தெரியப்படுத்தினர்.

    இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் வெற்றி பெற்ற பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுடன் நிற்கிறோம், வெற்றியை இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என்று பேசினார். கிரிக்கெட்டில் தேவையில்லாமல் அரசியலைக் கலக்கிறார் என்று சூரியகுமார் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் எழுப்பியது.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது போல் இந்திய ரசிகர்கள் பகுதிக்குச் சென்று செய்கை செய்தது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

    ஹாரிஸ் ராவுஃப் அவுட் ஆகிச் சென்ற போது பும்ராவும் அவரைப்போலவே பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது போன்ற செய்கையைச் செய்தார். அரைசதம் அடித்தவுடன் சும்மா போகாமல் துப்பாக்கியால் சுடுவது போல் செய்கை செய்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹானுக்கு ஒரு தகுதியிழப்புப் புள்ளி வழங்கப்பட்டது.

    இந்த ஒட்டுமொத்த அலங்கோலங்களை விசாரித்து ஐசிசி அதிகாரபூர்வ அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதனையடுத்து ஹாரிஸ் ராவுஃபிற்கு 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடத் தடை விதித்தது. சூரியகுமார் யாதவுக்கு 2 தகுதியிழப்புப் புள்ளிகளை விதித்தது. மேலும் அவரது சம்பளத்தில் 30% அபராதமும் விதித்தது. பும்ராவுக்கு ஒரு தகுதியிழப்புப் புள்ளி அளிக்கப்பட்டது.

    ஹாரிஸ் ராவுஃபுக்கு தடையுடன் 30% அபராதமும் விதிக்கப்பட்டது. இதன்படி ஹாரிஸ் ராவுஃப் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை. 6-ம் தேதி நடக்கும் 2-வது ஆட்டத்திலும் அவரால் ஆட முடியாது. 3வது போட்டியில்தான் அவரால் ஆட முடியும்.

    cricket#sports
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்
    Next Article ஆஷஸ் முதல் டெஸ்ட்: கோன்ஸ்டாஸ் டிராப்- வெதரால்ட் என்ற புதுமுகம் அறிமுகம்!
    Editor TN Talks

    Related Posts

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    December 26, 2025

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    December 26, 2025

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.