எம்.ஐ.கேப்டவுன் அணிக்கு எதிரான எஸ்.ஏ.20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தென்னாப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடரான எஸ்.ஏ.20 லீக்கின் நான்காவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்ஐ கேப்டவுன் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

மறுபக்கம் வேண்டர் டுசென் 2 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரிக்கெல்டனுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ஸ்மித் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜேசன் ஸ்மித் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் அணியால் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஈதன் போஷ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ.கேப்டவுன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் ரியான் ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version