நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதில் முதல் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தியதால் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை அணி. பின்னர் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப், பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளுமே இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்த போட்டி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 18 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை ஏந்தும் கனவில் இருக்கும் விராட் கோலி ஒருபுறம், பிசிசிஐ-யால் தொடர் நிராகரிப்புக்கு ஆளாகி தன் திறமையை மட்டும் நம்பி இருக்கும் ஸ்ரேயாஸ் மறுபுறம்.. இருவரில் யார் வென்றாலும், வென்றது கிரிக்கெட் மட்டுமே..
