Close Menu
    What's Hot

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»மகளிர் டி20: ஷஃபாலி, ரேனுகா அபாரம் – டி20 தொடரை வென்று இந்தியா அசத்தல்
    விளையாட்டு

    மகளிர் டி20: ஷஃபாலி, ரேனுகா அபாரம் – டி20 தொடரை வென்று இந்தியா அசத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    makalir
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

    இலங்கை மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்து இலங்கை மகளிர் அணியை பெட்டிங் செய்ய அழைத்தது.

    அதன்படி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஹாசினி பெரேரா-கேப்டன் சமாரி அத்தபத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அத்தபத்து 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரமாவும் 2 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு ஹாசினி பெரேராவும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

    பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் இமெஷா துலானி 27 ரன்களையும், கவிஷா தில்ஹாரி 20 ரன்களையும், கௌஷானி நுத்யாங்கனா 19 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். மறுபக்கம் விளையாடிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் ஷஃபாலியுடன் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்தும் அசத்தினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஃபாலி 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்த்தார்.

    அவருடன் இணைந்து ஹர்மன்ப்ரீத் கவுரும் 21 ரன்களைச் சேர்க்க, இந்திய மகளிர் அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் ரேனுகா சிங் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎஸ்ஏ20 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி
    Next Article வங்கதேச வன்முறையில் கபட நாடகம்: சினிமா பிரபலங்கள் ஜான்வி கபூர், காஜல் அகர்வால் கருத்து
    Editor TN Talks

    Related Posts

    ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை!. முதல் இந்திய வீராங்கனை!. வரலாறு படைத்த தீப்தி சர்மா!. 

    December 27, 2025

    எஸ்ஏ20 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி

    December 27, 2025

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    “சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை” – மதுரையில் அன்புமணி பேட்டி

    ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை!. முதல் இந்திய வீராங்கனை!. வரலாறு படைத்த தீப்தி சர்மா!. 

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.