இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நிறைவடைந்தது. 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.

முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 270 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக டீ காக் 106 ரன்கள் குவித்தார்.
பின்னர் விளையாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே மிக சிறப்பாக விளையாடி 61 பந்துகள் மீதும் வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 116* குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இது அவருக்கு முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா 75 ரன்கள் குவித்தார். அதோடு இந்திய அணியில் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என சர்வதேச அளவில் மொத்தமாக 20,000 ரன்களை குவித்த நான்காவது வீரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச அளவில் 20 ஆயிரம் ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடரின் வெற்றியை தீர்மானித்த மூன்றாவது போட்டியில் ஆட்டநாயகன் விருது ஜெய்ஸ்வால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

முதல் இரண்டு போட்டியில் சதம் இன்றைய போட்டியில் அரைசதம் என தொடரும் முழுவதும் அசத்திய விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற டிசம்பர் ஒன்பதாம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
