2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறிய “மைதானத்தை அமைதிப்படுத்துவோம்” என்ற அதே பாணியில், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன் தற்போது இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026-ன் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை (மார்ச் 5) மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி தனது ஆக்ரோஷமான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது.
சாம் கரன் கூறியது என்ன?: “இந்தியாவில், இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சவாலானது. வான்கடே மைதானம் இந்திய ரசிகர்களால் நிரம்பி வழியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தப் பெரும் கூட்டத்தை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு. கடந்த முறை பேட் கம்மின்ஸ் செய்ததைப் போலவே, நாங்களும் இந்திய ரசிகர்களை மௌனமாக்கத் தயாராக இருக்கிறோம்,” என்று சாம் கரன் தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களைத் தனது சிறப்பான பந்துவீச்சால் கம்மின்ஸ் அமைதிப்படுத்தினார். அதே போன்ற ஒரு வெற்றியை வான்கடேவில் பதிவு செய்ய இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
சாம் கர்ரனின் இந்தத் தைரியமான அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணி, இங்கிலாந்தின் இந்த சவாலை முறியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
