தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன்முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன. கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் பிரேமலதாவின் தேமுதிகவும் இணைந்துள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை 22ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்த திமுக தலைமை, டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினையும் அண்மையில் அறிவித்தது.
இன்று திமுகவின் பேச்சுவார்த்தைக்குழு, கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடன்கியிருக்கிறது.
முதல்நாளான இன்று, இந்திய யூனியன்முஸ்லிம் லீக் கட்சியுடன், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றபின். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்படும்.
நாளை வைகோவின் மதிமுகவுடனும் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை வகிக்கும் மனித நேய மக்கள் கட்சியுடனும், 26ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்த முறை தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28, தே.மு.தி.க.வுக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, ம.தி.மு.க.வுக்கு 6, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, ஓ.பன்னீர்செல்வத்திற்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. மீதமுள்ள 167 தொகுதிகளில் தி.மு.க. களம் காண இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதும்
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது

