சென்னையில் அமைந்துள்ளா இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
நேரலையில் காண: https://youtube.com/live/YSkzrv236C0?feature=share
மேலும் 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.