Close Menu
    What's Hot

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதியவர் மீது கொலை வெறி தாக்குதல்… இளைஞர்களுக்கு தர்ம அடி…
    தமிழ்நாடு

    முதியவர் மீது கொலை வெறி தாக்குதல்… இளைஞர்களுக்கு தர்ம அடி…

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் காந்திபுரத்தில் சாலையோரத்தில் இருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்த இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்பாக நேற்று(20.05.2025) இரவு சுமார் 65 வயது முதியவர் உணவருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் இரண்டு பேர், திடீரென முதியவரை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிலர், இளைஞர்களை தடுக்க முயற்சித்தனர்.

    அதனை கண்டுகொள்ளாமல் இளைஞர்கள் அந்த முதியவரை கற்களாலும், கையாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் சிலர் இணைந்து துணிச்சலுடன் இளைஞர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி தர்ம அடி கொடுத்தனர்.

    2 1

    அதே வேளையில் முதியவர் ரத்தம் சொட்ட சொட்ட அப்பகுதியில் ஓரமாக அமர வைக்கப்பட்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் இளைஞர்கள் இருவர் ஒப்படைக்கப்பட்டனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு இளைஞர்களும் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியைச் சேர்ந்த திவாகரன் மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. கோவை காந்திபுரம் பகுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வரும் இருவரும், கிடைக்கும் வேலைகளுக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மது அருந்துவதும் அவ்வப்போது இது போன்ற தகராறுகளில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

    3 1

    இதே போல் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் வேலூரைச் சேர்ந்த ராமசாமி என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காயமடைந்த முதியவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அதீத போதையில் இருந்த இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு கல்லூரிகளுக்கான புதிய கட்டிடங்கள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!!
    Next Article தென்பெண்ணை ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளம்.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…
    Editor TN Talks

    Related Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    July 21, 2026

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.