Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அஜித்குமார் கொலை வழக்கு… உயரதிகாரிகளுக்கு தொடர்பா… விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு…
    தமிழ்நாடு

    அஜித்குமார் கொலை வழக்கு… உயரதிகாரிகளுக்கு தொடர்பா… விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 21, 2025Updated:August 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அஜித்குமார் கொலை வழக்கில் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    நகை திருட்டு புகாரில் சிவகங்கையை சேர்ந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் போலீசார் விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையை தீவிரமாக சி.பி.ஐ. விசாரித்தது. நேற்று குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று வந்தது.

    வழக்கை விசரித்த நீதிபதிகள், “நிகிதா புகார் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் உள்ளூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். அஜித்குமார் கொலை வழக்கில் தடய அறிவியல் சோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்ற உடன், இந்த கொலை வழக்கில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

    மேலும் நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அவசியம். அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை தொடர்ந்து கண்காணிப்போம்” என உறுதி அளித்தனர்.

    பின்னர், “அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. முறையாக நடத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது பாராட்டத்தக்கது. பல்வேறு கட்ட விசாரணை முடிந்தபோதும் மேலும் பல கேள்விகள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். அதுதொடர்பான விசாரணையையும் அறிக்கையாக இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை : தவெக மாநாட்டில் 100 அடி கொடி கம்பம் சரிந்து விழுந்தது… கார் ஒன்று முற்றிலும் சேதம்…
    Next Article தமிழ்நாட்டில் 3,665 காவலர் பணியிடங்கள்… உடனடியாக நிரப்ப அறிவிப்பு…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.