Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சன் டிவி பங்கு சர்ச்சை… சட்டம் செயல்பட வேண்டும் என அண்ணாமலை விமர்சனம்…
    தமிழ்நாடு

    சன் டிவி பங்கு சர்ச்சை… சட்டம் செயல்பட வேண்டும் என அண்ணாமலை விமர்சனம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025Updated:June 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    15 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன், அந்நிறுவன பங்குகளை முறைகேடாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக, அவரது சகோதரர் தயாநிதிமாறன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், முரசொலி மாறன் உடல்நிலை சரியில்லாதபோது, சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மாற்றியதாகவும், இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்றும் தயாநிதி மாறன் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒரு வாரத்திற்குள் பங்குகளைத் திருப்பித் தராவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய துறைகளிடம் புகார் அளித்து சன் குழும வணிகங்களை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார். கலாநிதி மாறன், அவரது மனைவி உட்பட 8 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டால், சன் டிவி நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சன் டிவி நிறுவனம் மும்பை பகுங்கு சந்தைக்கு விளக்கமளித்துள்ளது. அதில், தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என கூறியுள்ளது. மேலும், 22 ஆண்டுக்கு முன்பு பிரைவேட் லிமிடெட் ஆக இருந்தபோது இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், வழக்கமாக கோபாலபுரம் குடும்பத்தினர் அவர்களது கூட்டாளிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்கள் ஊழலை வெளிப்படுத்தியதற்காக என்னை போன்ற சாதாரண மக்களுக்கு சட்ட அறிவிப்புகளை அனுப்புவார்கள். இம்முறை கோபாலபுரம் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்தி, தங்கள் சொந்த ஒருவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளனர்.

    14 6

    திமுக மக்களவை உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பில், குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8கோடி அளவுக்கு பணத்தை (இது கோபாலபுரம் குடும்பத்தின் பணம்) மோசடி செய்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இந்த பண மோசடி நடவடிக்கையின் மூலம் ரூ.6,381கோடி அளவுக்கு ஈவுத் தொகையை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இது வெறும் ஊழல் அல்ல: கோபாலபுரம் குடும்பத்தின் பேராசையின் பொது வெளிப்பாடு. மக்கள் பதில் அளிக்க வேண்டும். சட்டம் செயல்பட வேண்டும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபட்டாசு ஆலை விபத்தில் கணவர் உயிரிழப்பு… அரசு வேலை கோரி மனைவி மனு தாக்கல்…
    Next Article அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் ஏர் இந்தியா விமானம்… பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Trending Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.