Close Menu
    What's Hot

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எஸ்,பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு!. ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனுதாக்கல்!
    தமிழ்நாடு

    எஸ்,பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு!. ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனுதாக்கல்!

    Editor web3By Editor web3March 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hindutamil prod 2025 12 11 ix9sae2q Chennai High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி , சி.விஜயபாஸ்கர், எம். ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும் லஞ்சு ஒழிப்புத்துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார் .

    இதேபோல் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே.பி. அன்பழகன், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் , சி.விஜயபாஸ்கர் , கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டுள்ளார்.

    அதேபோல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் அந்த குற்றம் தொடர்பான வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துறை சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும் என்றும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால்,
    சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்

    எனவே அவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணை வரவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டமன்றத் தேர்தல்!. நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் சீமான்!
    Next Article விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    March 18, 2026

    சட்டமன்றத் தேர்தல்!. நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் சீமான்!

    March 18, 2026

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?. முக்கிய அறிவிப்பு!

    March 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    தாக்குதலில் இருந்து தப்பிய ஜக் லாட்கி கப்பல்!. கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது!.

    Trending Posts

    திமுக – சிபிஐ ஒப்பந்தம்!. 5 தொகுதிகள் ஒதுக்கீடு! கூடுதல் இடங்களுக்காக மல்லுக்கட்டும் CPM!.

    March 18, 2026

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    March 18, 2026

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?. முக்கிய அறிவிப்பு!

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.