Close Menu
    What's Hot

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»டிட்வா புயல்: பயிர் சேதம் கணக்கெடுப்பு பணிகளை முடுக்கிவிட ஸ்டாலின் அறிவுறுத்தல்!
    தமிழ்நாடு

    டிட்வா புயல்: பயிர் சேதம் கணக்கெடுப்பு பணிகளை முடுக்கிவிட ஸ்டாலின் அறிவுறுத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stll
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயல் காரணமாக தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், டிட்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    டிட்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டிட்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025-லிருந்து 01.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), இராமநாதபுரம் (8.7 செ.மீ). தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

    பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே முதல்வர் தலைமையில் 27.11.2025 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும், 28.11.2025 அன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டித்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் முதல்வர் தலைமையில், வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர், அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

    மேலும், அக்டோபர், 2025 மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டர் வேளாண் பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

    டிட்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

    கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்றும் முதல்வர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம், வருவாய் நிருவாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் பா. முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிடுமுறை அளிக்காமல் பள்ளிக் குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?.. அன்புமணி கண்டனம்
    Next Article “மழைக்காலத்தில் ‘ஷூட்டிங்’ மட்டும் போதாது” – ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    March 22, 2026

    அடுத்தடுத்து நெருக்கடி!. சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலை உயர்கிறது!.

    March 22, 2026

    கரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா?. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு!

    March 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தங்கம் விலையில் மெகா சரிவு!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து அதிரடி!

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    Trending Posts

    தங்கம் விலையில் மெகா சரிவு!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து அதிரடி!

    March 23, 2026

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    March 22, 2026

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    March 22, 2026

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    March 22, 2026

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    March 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.