Close Menu
    What's Hot

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வேலையை காட்டியது டிட்வா புயல்… தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலி
    தமிழ்நாடு

    வேலையை காட்டியது டிட்வா புயல்… தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cyclone Sitrang kills 35
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலியானதாகவும், 57 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் சென்னையில் இன்று (நவ.30) செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டிட்வா புயல் மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து இறந்தனர். மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். 149 கால்நடைகள் உயிரிழந்தன.

    57 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நாகப்பட்டினத்தில் மட்டும் 24 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களும், தஞ்சையில் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களும், மயிலாடுதுறையில் 8000 ஹெக்டேர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் 234 குடிசைகள் சேதமடைந்துள்ளன.

    38 நிவாரண முகாம்கள்: தமிழகத்தில் மழை பாதிப்பு அதிகமுள்ள 9 மாவட்டங்களில் 38 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தி அதில் 2300 பேரை தங்க வைத்துள்ளோம்.

    புயலின் அடுத்தக்கட்ட தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் புதிய அறிவிப்பு வெளியிடும். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அரசு சார்பாக வெளியிடப்படும் அறிவிப்புகளை மட்டும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதினமும் தயிர் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பிரச்சனைகளை தெரிஞ்சுக்கோங்க!
    Next Article பிரபல கன்னட நடிகர் உமேஷ் காலமானார்.. உயிரை பறித்தது கல்லீரல் புற்றுநோய்
    Editor TN Talks

    Related Posts

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.