Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதுச்சேரியில் 3-வது நாளாக கடல் சீற்றம்: கடல் அரிப்பால் சின்ன காலாப்பட்டு துண்டிப்பு!
    தமிழ்நாடு

    புதுச்சேரியில் 3-வது நாளாக கடல் சீற்றம்: கடல் அரிப்பால் சின்ன காலாப்பட்டு துண்டிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pdu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயலால் புதுச்சேரியில் 3-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 15 மீனவ கிராமங்களிலும் படகு, வலைகளை பாதுகாக்க மீனவர்கள் சிரமத்தில் உள்ள நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கடல் நீர் சூழ்ந்து சின்ன காலாப்பட்டு கிராமம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வருகிறது. இந்நிலையில், இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 7.53 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் புதுச்சேரி கடற்கரைச் சாலை மூடப்பட்டது. இது தெரியாமல் ஆர்வமாக பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு வந்த நிலையில்  போலீஸார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

    டிட்வா புயலின் தாக்கம் மீனவ கிராமங்களில் அதிகம் இருந்தது. குறிப்பாக கனகசெட்டிக்குளம் தொடங்கி முள்ளோரை வரை 15 கிராமங்களிலும்  படகு, வலைகளை பாதுகாக்க மீனவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். குறிப்பாக சோலைநகர் பகுதியில் மழைநீர் புகுந்தததால் படகுகளை பாதுகாப்பான மேடான பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர்.

    மழை காரணமாக சின்ன காலாப்பட்டு பகுதியில் இருந்து ஊருக்குச் செல்லும் பிரதான சாலையில் கடல் நீரால் அரிப்பு ஏற்பட்டு  கிராமம் துண்டிக்கப்பட்டது. கடல் அரிப்பு பிரதான சாலை உடைந்து துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் 300 பேர் தவிக்கின்றனர்.

    இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், “நேற்று சாலை இருந்தது. காலையில் எழுந்து பார்த்தோம். சாலையை காணவில்லை. கடல் அரிப்பு அதிகமாக இருந்ததால் தூண்டில் முள் வளைவு கேட்டோம். அதை செய்யவில்லை. அதனால் தான் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.

    குறிப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு டிராக்டர், ஜேசிபி இயந்திரம் செல்ல முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

    டிட்வா புயலால் மழை தொடர்ச்சியாக பெய்வதால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வெறிச்சோடியது. கடல் சீற்றம் அதிகரித்து,  அதிக உயரத்துக்கு அலை அடிக்கிறது. பழைய துறைமுகத்திலுள்ள பழைய பாலம் வரை அலையின் வேகம் உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; பூண்டி ஏரியில் 4,000 கனஅடி நீர் வெளியேற்றம்
    Next Article நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது டெல்லி காவல்துறை புதிய எஃப்ஐஆர்
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.