Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தனுஷ், சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் வீட்டில் ED சோதனை..
    தமிழ்நாடு

    தனுஷ், சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் வீட்டில் ED சோதனை..

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2025Updated:May 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Project
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..

    சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் பல்வேறு வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாசாலை, பெசண்ட் நகர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தியாகராய நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

    சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கி உள்ளனர். பாதுகாப்பு கருதி மத்திய ரிசர்வ் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளை சோதனை மேற்கொண்டு ஆவணங்களை திரட்டி வருகின்றனர்.

    டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கடந்த 10 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையில் தொடரப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தி குறிப்புகளின்படி, பணியிடமாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் உரிமம் டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமான ஆர்டர்கள், பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 அதிகமாக வசூலித்தது போன்ற குற்றங்களுக்கான தரவுகள் கிடைத்தாக தெரிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணிபரிமாற்றம் நடைபெற்று இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக குற்றஞ்சாட்டியது.

    இதன் நீட்சியாகவே இன்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    images 1 1

    இதனிடையே தனுஷின் இட்லிக்கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் என்பவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சாதாரண நபராக வலம்வந்த ஆகாஷ் பாஸ்கரன் எப்படி திடீரென்று பல்லாயிரம் கோடிகளில் புரள்கிறார் என்ற கேள்வியோடு இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    dhanush ED சோதனை sivakarthikeyan ஆகாஷ் பாஸ்கரன் இட்லிக்கடை பராசக்தி லஞ்ச ஒழிப்புத்துறை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராமதாஸ் அழைப்பை புறக்கணித்த மாவட்டச் செயலாளர்கள்…பாமகவில் ஓரம் கட்டப்படும் மருத்துவர் ராமதாஸ்…
    Next Article சந்தானம் படத்திற்கு நீங்கியது சிக்கல்…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.