Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»140 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை! முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    140 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை! முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mull
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழக எல்லையை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கியின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றை விட இன்று மழை சற்றே குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து 5,135 கன அடியிலிருந்து விநாடிக்கு 3,999 கன அடியாகக் குறைந்தது. ஆனாலும், இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 138.65 அடியிலிருந்து ஒரே நாளில் 139.80 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, இன்று மாலை 6 மணி நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 400 கன அடியிலிருந்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும், அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டி உயர்ந்து வருவது குறித்து முறையே இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு 2-வது எச்சரிக்கை தகவல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதாவது, அணை நீர்மட்டம் 140 அடியை எட்டும் போது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடிக்கு வந்ததும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். ஒருவேளை 142 அடியை எட்டினால் இறுதி அல்லது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக உபரி நீர் கேரளாவிற்குள் திறந்து விடப்படும்.

    அதையடுத்து, கேரளாவிற்குள் உபரி நீர் வெளியேறும் வல்லக்கடவு சப்பாத்து, வண்டிப்பெரியாறு, உப்புத்தரா வழி இடுக்கி அணை வரையிலான முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்படும்.

    மேலும், ‘ரூல் கர்வ்’ விதிப்படி, அணையின் நீர்மட்டம் நவம்பர் 30ஆம் தேதி வரையில் 141 அடியாகவும், நவம்பர் 30ஆம் தேதிக்குப் பின் 142 அடியாகவும் (மொத்த உயரம் 152) உயர்த்திக் கொள்ள விதி உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீரை உபரி நீராகக் கேரளாவிற்கு, அவசர கால நீர் வழிப் போக்கிகள் மூலம் வெளியேற்ற வேண்டும் என கடந்த 2014-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை 142 அடிகளாக உயர்த்தும் நடவடிக்கைக்காக, தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்கள் இன்று முல்லைப் பெரியாறு அணையில் முகாமிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்திற்கு வருகிறாரா ???
    Next Article அடுத்த 9 நாட்கள் யாரும் வெளியே போகக் கூடாது! அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.