சென்னையில் இன்று (டிச.,17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பல நாடுகளும் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதால், அதன் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டில் தங்கம் விலை, தினமும் உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம் (டிச.,15) ஆபரண தங்கம் கிராம், 12,515 ரூபாய்க்கும்; சவரன், ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 215 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (டிச.,16) திடீரென தங்கம் விலை கிராமுக்கு, 165 ரூபாய் குறைந்து, 12,350 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,320 ரூபாய் சரிவடைந்து, 98,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்து , 211 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (டிச.,17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.222க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 22 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றிலேயே இல்லாத வகையில் வெள்ளி விலை புதிய உச்சம் தொட்டுள்ளது.
