உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிந்து போயிருக்கும் என்ற வைகோவின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக கூட்டணியில் கூடுதல் சீட் வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்து வருகிறார். இதே போன்று காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படும் உட்கட்சி பூசல்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், மாணிக்கம் தாகூர் பேசி வருவது உள்ளூர் சண்டை போல இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது வழக்கம் தான். அவர்களின் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிந்து போயிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. அதேசமயம் அக்கட்சி சொல்வதை எல்லாம் திமுக கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியதில்லை என்று வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்த போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று பதிவிட்டிருக்கிறார். அதாவது, கட்சி தலைமையின் உத்தரவிற்கு கீழ்ப் படிந்து நடக்க ஆரம்பித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version