தமிழக அரசு இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலாளராக பணியாற்றி வந்த ஆர். லில்லி, ஐஏஎஸ், அச்சு மற்றும் எழுதுபொருள் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அச்சு மற்றும் எழுதுபொருள் இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர். சுகுமார் ஐஏஎஸ், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக (Joint Commissioner, Municipal Administration) மாற்றப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version